கப்பலோட்டிய தமிழனும் கள்ளத்தோணியும்
பல கசப்பான நிகழ்வுகளை விதைத்துச் சென்ற முப்பது வருட கால யுத்தம் இன, மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கை மக்கள் அனைவரது வாழ்விலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலவிதமான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாத வரலாறு. எமக்கிடையேயான வேறுபாடு, நமக்கிடையே காழ்ப்புணர்வை விதைத்ததும், அக் காழ்ப்புணர்வு இனங்களுக்கு இடையில் வன்முறைகளாக செயலாக்கம் அடைந்ததும் கண்கூடு. இந்த காழ்ப்புணர்வு எவ்வாறு ஆரம்பித்தது? யார் ஆரம்பித்து வைத்தது? யார் பொறுப்பாளி? எவரினுடைய வகிபங்கு அதிகமாது? குற்றவாளி யார்? மோசமான குற்றவாளி யார்? என்று ஆராய்வதல்ல இந்தப் பதிவின் நோக்கம். மாறாக, இந்த வன்முறையின் வடுக்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதனை, குறிப்பாக பாதிக்கப்படாமலேயே, பாதிக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டு வளர்முக நாடுகளில் எம்மவர்கள் அகதி அந்தஸ்து கோருகின்ற செயற்பாடு உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பினையும் நல்வாழ்வினையும் எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பது தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இது. அகதி அந்தஸ்து கோருதல் தொடர்பாகப் பணியாற்றுகின்ற பல உண்ணாட்டு