இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழுக்கட்டையா மோதகமா?

இலங்கையர்களாக எம்முடைய தலைவிதியினை நாமே தீர்மானிக்க ஆரம்பித்து 66 வருடங்கள் முடிவடைந்தும் எமக்கிடையேயான வேற்றுமைகள் இன்னும் களையப்படாமலே இருப்பது கண்கூடு. அடிக்கடி வந்துபோகும் தேர்தல்களும் கூடவே அரங்கேறும் ஆட்சி மாற்றங்களும் எம்முடைய வாழ்வின் தவிர்க்க முடியாத பாகங்களாகிவிட்டன. ஜனநாயக ஆட்சிக்கு இத்தகைய பொறிமுறைகள் அத்தியாவசியமானவை என்பது அனைவரும் அறிந்தது. இருப்பினும் இத்தகைய கட்சித் தேர்தல் பொறிமுறைகள், கையாளப்படுகின்ற / அணுகப்படுகின்ற தன்மை மனதினை நெருடுகின்ற வகையில் அமைந்துள்ளமை கசப்பான உண்மை. சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் (திடீர்) திருப்பங்களும் கட்சி மாறல்களும் மக்களின் மனதில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளமை கண்கூடு. தென்னிலங்கை அரசியல், தமிழர்களின் அபிலாசைகளை குழி தோண்டிப்புதைப்பதில் எவருக்கு ஈடுபாடு அதிகம் என்பதனையும் போரினை முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டும் போதுமா என்ற கேள்வியினையும் அடிப்படையாகக் கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்ற வேளையில் தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கினைத் தாயகமாக் கொண்ட தமிழர்களின் எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக உள்ளமை வெள்ளிடை மலை. அடுத்த ஜனா