நல்ல மேய்ப்பரும் மேயத்தெரியாத மந்தைகளும்!
ஆடம்பர அரசியல் செய்தால் மட்டுமே அரசியல்வாதியாகப் பிழைப்பு நடத்த முடியும் என்று வாழ்பவர்கள் மத்தியில், சம காலத்தில், 'நிறைகுடம் தழும்பாது' என்பதற்கு வாழும் சான்றாக இருப்பவர் சம்பந்தர் ஐயா. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்பவர்கள் எவருமே அதில் இறங்கிச் சுத்தம் செய்ய முன்வந்ததில்லை. இறங்கி இருப்பவர்கள் எல்லோரும் சுத்தம் செய்ய வந்தவர்கள் இல்லை. முடிந்தவரை சுத்தம் செய்வேன் என்று 1977 இல் இருந்து பாடுபட்டு வரும் ஒரு நல்ல தலைவர், மேய்ப்பர்; தமிழர்களின் சம்பந்தன் ஐயா. அடாவடித்தனத்தையும் அதிகப்பிரசங்கித்தனத்தையும் அரசியல் என்று கருதுகின்ற பல மூத்த அரசியல்வாதிகள் எமக்குக் கிடைத்த வரமல்ல; சாபம். இவ்வாறான அடாவடித்தனமானதும் அதிகப்பிரசங்கித்தனமானதுமான "அரசியல்" எமக்கு எந்த விதமான நன்மையையும் பயக்காது; மாறாக எமது இன ஒற்றுமையையும், எமக்குள்ள அங்கீகாரத்தையும் சீர்குலைக்கும் என்பதனைப் புரிந்துகொள்ளாத இளைஞர்களின் சூடான உதிரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகளை இனம்கண்டு களையெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இருந்தும் இல்லாமலிருக்கும்