இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்சி என்னும் காட்டாறு

ஒரே மாதிரியான கொள்கைகளையும், கோற்பாடுகளையும் அரசியல்-சமூக சித்தாந்தங்களையும் கொண்டவர்கள், தனி நபர் ஒருவரின் பின்னாலோ அல்லது ஒரு அமைப்பின் பின்னலோ ஒன்று திரள்வது என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை. அந்த உரிமையினை நிலைநாட்டும் எவரையும் சாடுவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, காலப்போக்கில் இவ்வாறான அணிகள் தங்களுடைய அடிப்படையினை, அடையாளத்தினை இழந்து வெறுமனே அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொள்வது அல்லது கைப்பற்றிக்கொண்ட அதிகாரத்தினைத் தக்கவைத்துக்கொள்வது என்ற ஒரே நோக்கத்தினை மையமாகக் கொண்டு தங்களுடைய செயற்பாடுகளினை முன்னெடுத்துச் செல்வதனையும் அத்தகைய அணிகளின் பின்னால், பகுத்தறிவின்றி மந்தைகளைப் போன்று ஓடிக்கொண்டு இருக்கின்ற துரதிர்ஷ்டத்தினையும் எனது வார்த்திகளில் பதிவிடுவதே நோக்கம். சில நபர்களை அல்லது குழுக்களினை, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் தட்டிக்கேட்காமலும் தங்களுடைய அரசியல் சுயலாபங்களுக்காக, அப்படியே அங்கீகரித்துக்கொள்கின்ற அரசியல்வாதிகளினை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்ற மடைமை களையப்படாவிட்டால் எம்முடைய அபிலாசைகள் மட்டுமன்றி அடையாளமும் அடியோடு அழிக்கப்பட்டுவிடும் என்பத