இடுகைகள்

மாற்றத்தினை மறுக்காத ஒரு பாமரத்தமிழன்

பொதுத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான (அரசியல்) கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களிடையே / குழுக்களிடையே நிலவி வந்தாலும் தமிழ் மக்களினைப் பொருத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரையில் இரு அரசியல் கட்சிகள் தொடர்பிலான அவ் இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாறல்களும், சாடல்களும், சேறு பூசல்களும்  வகைதொகையின்றி வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இணைய ஊடகங்களும் முகப்புத்தக பதிவுகளும் தங்களுடைய நாளாந்த வாழ்வில் சிக்கித் திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களை அல்லல் படுத்திக்கொண்டிருப்பது கண்கூடு. இவ்வாறன கருத்துப் பரிமாறல்கள் மனித விழுமியங்களையும் நாம் வாய் கிழியப் பேசும் தமிழர் பண்பாடுகளையும் மீறாத வகையில் அமையும் வரைக்கும் ஆரோக்கியமானதே. ஒரு வகையில் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதனை எம்மில் பலருக்கு நினைவுபடுத்துவதே தேர்தல்களும் இவ்வாறன கருத்து மோதல்களும் தான். நிற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுக்கு இடையிலான கட்சி ஆதரவாளர்களுக்கு இடையிலான வாதப்-பிரதிவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லாமல் எதிரணியினர் மீது சேறு பூசுவதாக

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை

ஜனவரி 8 இற்கு முன்னர் அடாவடித்தனமான அரசியலுக்கு பயந்து வாயோடு சேர்த்து அத்தனை ஓட்டைகளையும் மூடிக்கொண்டிருந்த அத்தனை இன உணர்வாளர்களும் இன்று பாய்ந்தடித்துக்கொண்டு கருத்துச் சொல்வதைப் பார்க்கும் போது மைத்திரிக்கு வாக்களித்தது வீண்போகவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த 9 வருடங்களாக நடந்த காட்டுமிராண்டித்தனமான ஆளுகைக்கும் அதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கி முனையில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முறைமைக்கும் பழக்கப்பட்டுப் போன எமக்கு, நாம் தற்போது சுவாசிக்கின்ற ஜனநாயகக் காற்றின் அடர்த்தி சற்று அசௌகரியமாக இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பத்திரிகைகளிலும் பத்திரிகை விழுமியங்களை அலட்சியப்படுத்தும் இணைய ஊடகங்களிலும் (ஒட்டுமொத்தமாக குற்றம் சாடுவதல்ல நோக்கம்) வெளிவரும் செய்திகள்  மாத்திரம் தான் இலங்கை அரசியல் என்கின்ற ரீதியில் தங்கள் அரசியல் ஆய்வுகளை முன்வைக்கும் கற்றுக்குட்டிகளை பார்க்கும் போது எமது வளர்ச்சியின் போக்கு புரிகிறது. 30 வருட யுத்தத்தினால் இலங்கையராகிய நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதனை மறுப்பதற்கில்லை. பாதிக்கப்பட்ட நபரின் திறனையும் பின்புல

கொழுக்கட்டையா மோதகமா?

இலங்கையர்களாக எம்முடைய தலைவிதியினை நாமே தீர்மானிக்க ஆரம்பித்து 66 வருடங்கள் முடிவடைந்தும் எமக்கிடையேயான வேற்றுமைகள் இன்னும் களையப்படாமலே இருப்பது கண்கூடு. அடிக்கடி வந்துபோகும் தேர்தல்களும் கூடவே அரங்கேறும் ஆட்சி மாற்றங்களும் எம்முடைய வாழ்வின் தவிர்க்க முடியாத பாகங்களாகிவிட்டன. ஜனநாயக ஆட்சிக்கு இத்தகைய பொறிமுறைகள் அத்தியாவசியமானவை என்பது அனைவரும் அறிந்தது. இருப்பினும் இத்தகைய கட்சித் தேர்தல் பொறிமுறைகள், கையாளப்படுகின்ற / அணுகப்படுகின்ற தன்மை மனதினை நெருடுகின்ற வகையில் அமைந்துள்ளமை கசப்பான உண்மை. சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் (திடீர்) திருப்பங்களும் கட்சி மாறல்களும் மக்களின் மனதில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளமை கண்கூடு. தென்னிலங்கை அரசியல், தமிழர்களின் அபிலாசைகளை குழி தோண்டிப்புதைப்பதில் எவருக்கு ஈடுபாடு அதிகம் என்பதனையும் போரினை முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டும் போதுமா என்ற கேள்வியினையும் அடிப்படையாகக் கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்ற வேளையில் தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கினைத் தாயகமாக் கொண்ட தமிழர்களின் எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக உள்ளமை வெள்ளிடை மலை. அடுத்த ஜனா

கட்சி என்னும் காட்டாறு

ஒரே மாதிரியான கொள்கைகளையும், கோற்பாடுகளையும் அரசியல்-சமூக சித்தாந்தங்களையும் கொண்டவர்கள், தனி நபர் ஒருவரின் பின்னாலோ அல்லது ஒரு அமைப்பின் பின்னலோ ஒன்று திரள்வது என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை. அந்த உரிமையினை நிலைநாட்டும் எவரையும் சாடுவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, காலப்போக்கில் இவ்வாறான அணிகள் தங்களுடைய அடிப்படையினை, அடையாளத்தினை இழந்து வெறுமனே அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொள்வது அல்லது கைப்பற்றிக்கொண்ட அதிகாரத்தினைத் தக்கவைத்துக்கொள்வது என்ற ஒரே நோக்கத்தினை மையமாகக் கொண்டு தங்களுடைய செயற்பாடுகளினை முன்னெடுத்துச் செல்வதனையும் அத்தகைய அணிகளின் பின்னால், பகுத்தறிவின்றி மந்தைகளைப் போன்று ஓடிக்கொண்டு இருக்கின்ற துரதிர்ஷ்டத்தினையும் எனது வார்த்திகளில் பதிவிடுவதே நோக்கம். சில நபர்களை அல்லது குழுக்களினை, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் தட்டிக்கேட்காமலும் தங்களுடைய அரசியல் சுயலாபங்களுக்காக, அப்படியே அங்கீகரித்துக்கொள்கின்ற அரசியல்வாதிகளினை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்ற மடைமை களையப்படாவிட்டால் எம்முடைய அபிலாசைகள் மட்டுமன்றி அடையாளமும் அடியோடு அழிக்கப்பட்டுவிடும் என்பத

கொன்றது நீ; குற்றவாளி நான்: (தற்)கொலைகள்

அடுத்தடுத்து பிரசுரமாகும் தற்கொலை செய்திகள், தற்கொலை என்பது தொற்றும் தன்மை உடையது என்று சமீபத்தில் எங்கோ வாசித்ததை நினைவுபடுத்திச் சென்றது. குறித்த தற்கொலைச் செய்திகள் என் மனதினை ரம்பமாக அறுப்பதினை என்னால் ஒவ்வொரு நொடியும் உணரமுடிகிறது. ஒரு காலத்தில் தற்கொலை செய்பவர்கள் அனைவரும் முட்டாள்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று சொல்லித்திரிந்தவன் நான். ஆனால் இப்போதெல்லாம் அந்த அதிகப்பிரசங்கித்தனத்தினை எண்ணி வெட்கி நிற்கின்றேன். தற்கொலை என்பது எந்தக் காலகட்டத்திலும் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதனை மறுதலிக்கவில்லை. அதேவேளை, தற்கொலை செய்தவர்களை, செய்ய எத்தனிப்பவர்களை விமர்சிப்பதற்கான அருகதை (சமூக அங்கத்தவர்கள் என்ற வகையில்) சிறிதளவேனும் இருக்கிறதா என்பதனை ஆராய வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதனையும் மறுதலிக்க முடியாது. இங்கு எவரும் தன்னுடைய வாழ்க்கையை இப்படி இடைநடுவில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பூமிக்கு வருவதில்லை. நாகரிகம், வளர்ச்சி, மேம்பாடு என்ற செயற்கைத்தனமான சமூகக் கடப்பாடுகளின் தாக்கம் ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கை உருவம் பெறுவதில்

நல்ல மேய்ப்பரும் மேயத்தெரியாத மந்தைகளும்!

ஆடம்பர  அரசியல்  செய்தால் மட்டுமே அரசியல்வாதியாகப்  பிழைப்பு நடத்த முடியும் என்று வாழ்பவர்கள் மத்தியில், சம காலத்தில், 'நிறைகுடம் தழும்பாது' என்பதற்கு வாழும் சான்றாக இருப்பவர் சம்பந்தர் ஐயா. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்பவர்கள் எவருமே அதில் இறங்கிச் சுத்தம் செய்ய முன்வந்ததில்லை. இறங்கி இருப்பவர்கள் எல்லோரும் சுத்தம் செய்ய வந்தவர்கள் இல்லை. முடிந்தவரை சுத்தம் செய்வேன் என்று 1977 இல் இருந்து பாடுபட்டு வரும் ஒரு நல்ல தலைவர், மேய்ப்பர்; தமிழர்களின் சம்பந்தன் ஐயா.   அடாவடித்தனத்தையும் அதிகப்பிரசங்கித்தனத்தையும் அரசியல் என்று கருதுகின்ற பல மூத்த அரசியல்வாதிகள் எமக்குக் கிடைத்த வரமல்ல; சாபம். இவ்வாறான அடாவடித்தனமானதும் அதிகப்பிரசங்கித்தனமானதுமான "அரசியல்" எமக்கு எந்த விதமான நன்மையையும் பயக்காது; மாறாக எமது இன ஒற்றுமையையும், எமக்குள்ள அங்கீகாரத்தையும் சீர்குலைக்கும் என்பதனைப் புரிந்துகொள்ளாத இளைஞர்களின் சூடான உதிரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகளை இனம்கண்டு களையெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.  ஆனால் இருந்தும் இல்லாமலிருக்கும்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

இப் பதிவுடன் தொடர்புபட்ட சிறிய விபரத்துணுக்கு: யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு 116 km யாழ்ப்பாணம் - கொடிகாமம் 23 km சமீபத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு ஆசன முற்பதிவு செய்யமுடியாத பேருந்தில் பயணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. வேலை நிமித்தமாக யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவுக்கு காலை 5.20 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட, பார்த்த விஷயங்களின் உந்துதல் தான் இந்தப் பதிவு. முல்லைத்தீவுக்கு காலை 5.20 மணிக்கு செல்வதற்கு அதிகம்பேர் முண்டியடிக்கமாட்டார்கள் என்ற தப்புக் கணக்குடன் காலை 5.10 யாழ்ப்பாண தனியார் பேருந்துத் தரிப்பிடத்துக்கு சென்ற எனக்கு அதிர்ச்சி. வழிநெடுக இருக்கின்ற ஊர்களின் பெயரைக் கூவிக்கொண்டிருந்த நடத்துனரை அணுகி, பேருந்து சரியானது என்பதனை உறுதி செய்துகொண்டு உள்ளுக்குள் நுழைந்த என்னை ஆசனங்கள்  எங்கும் தூக்கம் வராமலே படுத்திருந்த பைகள் வரவேற்றன. ஏற்கனவே வந்திருந்தவர்கள் தமக்காகவும் இன்னும் வராத தமக்குத் தெரிந்தவர்களுக்காகவும் ஆசனங்களை தம்முடைய பைகளை வைத்து ஒதுக்கியிருந்தார்கள். அவசரமாகக் கண்கள் துளாவியதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு ஆசனங்கள் வெறுமையாக இருந