மாற்றத்தினை மறுக்காத ஒரு பாமரத்தமிழன்
பொதுத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான (அரசியல்) கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களிடையே / குழுக்களிடையே நிலவி வந்தாலும் தமிழ் மக்களினைப் பொருத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரையில் இரு அரசியல் கட்சிகள் தொடர்பிலான அவ் இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாறல்களும், சாடல்களும், சேறு பூசல்களும் வகைதொகையின்றி வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இணைய ஊடகங்களும் முகப்புத்தக பதிவுகளும் தங்களுடைய நாளாந்த வாழ்வில் சிக்கித் திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களை அல்லல் படுத்திக்கொண்டிருப்பது கண்கூடு. இவ்வாறன கருத்துப் பரிமாறல்கள் மனித விழுமியங்களையும் நாம் வாய் கிழியப் பேசும் தமிழர் பண்பாடுகளையும் மீறாத வகையில் அமையும் வரைக்கும் ஆரோக்கியமானதே. ஒரு வகையில் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதனை எம்மில் பலருக்கு நினைவுபடுத்துவதே தேர்தல்களும் இவ்வாறன கருத்து மோதல்களும் தான். நிற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுக்கு இடையிலான கட்சி ஆதரவாளர்களுக்கு இடையிலான வாதப்-பிரதிவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லாமல் எதிரணியினர் மீது சேறு பூசுவதாக